திங்கள், 1 பிப்ரவரி, 2010

The Corrupt Society - the criminalization of India from Independence to the 1990s" by Chandan Mitra pub 1998 (penguin books india)

சமீபத்தில் படித்தது "The Corrupt Society - the criminalization of India from Independence to the 1990s" by Chandan Mitra pub 1998 (penguin books india)
இந்தியா சுதந்திரம் வாங்கியது முதல் 1990கள் வரை நடந்த ஊழல்களை பட்டியலிட்டு காண்பித்திருக்கும் ஒரு நல்ல புத்தகம். இப்போதிய தலைமுறை ஏதோ ஊழல் புரிவது 1970 அல்லது 1980 களில் ஆரம்பித்த ஒன்றாகத்தான் நினைத்துகொன்றிருந்தோம். ஆனால் சுதந்திரம் வாங்கிய ஒரு வருடத்திற்குள் ஊழல் புரிவது ஆரம்பித்து விட்டது என்பது அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. 800 Jeep வாங்க 8 லட்சம் விலை பேசப்பட்டதும், அதுவும் இல்லாமல் அவை 'RECONDITIONED' என்பதும், மேலும் முதல் தவணையாக வந்திறங்கிய 100+ வண்டிகள் அனைத்தும் காயலாங்கடைக்கு போகத்தான் லாயக்கானவை என்பது மட்டும் அல்லாமல் அதற்கு காரணமான நேருவின் நண்பரான இங்கிலாந்து தூதர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதும் இந்தியாவின் ஊழலுக்கு பிள்ளையார் சுழியாகும்.

பல சுவாரிஸ்யமான தகவல்கள் இப்புத்தகத்தில் பல உள்ளது, எடுத்துகாட்டாக , லாலு நடத்தேரிய மாட்டு தீவன ஊழல் வழக்கில், இரண்டு எருமை மாடுகளை ஸ்கூட்டரில் எடுத்து சென்றதாக அதிகாரிகள் குறிப்பு எழுதி இருப்பது, ராஜீவ் காந்தி ஹெலிகாப்ட்டர் ஊழல் வழக்கு ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

ஆனால் நாம் நித்தம் உழன்று கொண்டிருக்கும் இந்த ஊழல் யூகத்தில், அதையே திருப்பி படிப்பது சில நேரங்களில் சலிப்பை வரவழைக்கிறது மற்றபடி படிக்க உகந்த ஒரு புத்தகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக