திங்கள், 18 ஜனவரி, 2010

இறைச்சிகாடு

சமீபத்தில் படித்த புத்தகம் 'இறைச்சிகாடு'

இந்த புத்தகத்தின் அடிநாடி, சோசியலிச கொள்கைகள் ஆகும். இதனை அமெரிக்கா தொழில்மயமாக தொடங்கிய கால கட்டத்தில் நிகழும் கதையாக செழுமையாக கையாலப்பட்டிருகிறது. கதையின் நாயகன் உட்கீஸ் லிதுவேனியா நாட்டில் இருந்து கனவுகளோடு அமெரிக்கா குடிபெயர்ந்து அங்கு வாழ்வை துவக்கும் முன் முதலாளித்துவ குள்ளனரிகளின் தொழிற்சாலை அரசியலில் அகப்பட்டுக்கொண்டு வேலை இழந்து அவன் கனவுகள் நொறுங்கி சோசியலிச பாதைக்கு திருபுவதே கதையின் கரு.

இந்த கதையின் சிறப்பு, தொழில் மயமாவதர்க்கு முன் இருந்த அமெரிக்காவை கண் முன் நிறுத்தி இருபது. ஆரம்பகால அமெரிக்க தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை நிலைநிறுத்திக்கொள்ள பட்ட சிரமங்களை மிக நேர்த்தியாக சொல்லியிருகிறார் ஆசிரியர்.

நிச்சயம் ஒரு முறை படிக்க உகந்த புத்தகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக